Sunday, February 7, 2016

14. மணமகளே வா!

அறைக்கதவு சத்தமில்லாமல் திறந்து மூடியது. கட்டிலில் உட்கார்ந்திருந்த சங்கர் நிமிர்ந்து பார்த்தான். பூமியில் கால் படாமல் நடந்து வரும் தேவதை போல் சத்தமில்லாமல்  நடந்து வந்தாள் அவள். பூரணமான முதல் இரவு அலங்காரம். மேடுபள்ளம் பார்த்து நடப்பதிலேயே கவனம் இருப்பதுபோல் தலை தொங்கி இருந்தது.

அவளை அப்படியே தூக்கிப் படுக்கையில் கிடத்தினான். முகவாயை நிமிர்த்தி முகத்தைப் பார்த்தான். ஏராளமான பட்டுப்புடவைக்கு நடுவே இடையே கொஞ்சமாகத் தெரிந்த முகத்தின் சிவப்பு இரட்டிப்பாயிருந்தது. பெண்கள் நாணம் கொள்வது தங்கள் நிறத்தை மிகைப்படுத்தக் காட்டத்தானோ என்று நினைத்துக் கொண்டான்.

வெறியூட்டும் அழகு. ஆனால் இதை மெதுவாக, நிதானமாக, அணு அணுவாக அனுபவிக்க வேண்டும். இரவு முழுவதும் எதற்காக இருக்கிறது?

"ஷீலா!"

"ம்..." துரத்திலிருந்து கேட்பதுபோல் அவள்  குரல் கேட்டது.

"என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?"

அவள் பதில் சொல்லவில்லை. வெட்கமா? அல்லது 'பிடிக்கவில்லை என்று சொன்னால் விட்டு விடவா போகிறான்?' என்ற நினைப்பா? அல்லது 'என் அபிப்பிராயத்க்தை யார் கேட்டார்கள்?' என்று மனதுக்குள் குமுறலா?

அவன் சற்றும் எதிபாராத வகையில் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தன் இதழ்களால் அவன் முகத்தில்...

ஓ! பாலசந்தர் பட நாயகி போல் மறைமுகமாக பதில் சொல்லி விட்டாள். 'தாங்க யூ!'

"எனக்கு ஒரு சந்தேகம்."

'என்ன' என்பது போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

"முதல் இரவுக்கு இவ்வளவு அலங்காரங்கள் என்? அவ்வளவையும் இப்போது கலைக்கத்தானே போகிறேன்?"

அவள் கைகளால் தன முகத்தை மூடிக் கொண்டாள். 'ரொம்பவும்தான் வெட்கப்பட வைக்கிறான்' என்று நினைத்துக் கொள்வாளோ?

மிக மென்மையான மஞ்சள் நிறக் கைகளையும், விரல்களையும் பார்த்தான். வெண்டைக்காய்க்கு லேடீஸ் ஃ பிங்கர் என்று பெயர் வைத்தவன் ஒரு அருமையான கலா ரசிகனாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. சிறு வயதில் அம்மா வெண்டைக்காய் நறுக்கும்போது பிஞ்சு வெண்டைக் காய்களைப் படக் படக் என்று ஒடித்துத் தின்றிருக்கிறான். அது போல் இந்த விரல்களையும்...


அவள் விரல்களை இழுத்துத் தன் உதடுகளில் பதித்துக்கொள்ளத்தான் முடிந்தது.

பார்த்து ரசித்தது போதும். இனி..

அவள் சேலைத்தலைப்பை மெல்ல விலக்கினான். அவள்   மீண்டும் தன் கைகளில் முகத்தை மறைத்துக் கொண்டாள். நீல நிற ரவிக்கை அவனுக்கு நல்வரவு கூறியது. ஏராளமான இடையில் செழுமையான மடிப்புகள்.

முகத்தழகை மட்டுமே பார்த்து அவளைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் எல்லா விதங்களிலுமே அவள்  ஒரு முதல் தர அழகிதான் என்ற உணர்வில் அவன் புளகாங்கிதம் அடைந்தான்.

இறுக்கமான கேசத்தை மடியில் பற்றி அதன் அடியைத் தேடி அலைந்தான். அவள் முதுகினுடே ஊர்ந்த விரல்கள் முதுகுக்குக் கிழே அவள் பின்னல் வந்து முடிவதைத் தொட்டு உணர்ந்தன.

இனியும் அவனுக்குப் பொறுமை இல்லை. தம்புராவின் உறையை நீக்கிச் சுருதி சேர்க்க வேண்டியதுதான்.

விடிகாலையில் அவன் கண் விழித்தபோது அவள் முகம் கழுவி உடை உடுத்தித் தன்னைச் சரி செய்து  கொண்டிருந்தாள். முகத்தில் இப்போது நாணம் இல்லை. இலேசாகக் களைப்பு தெரிந்தது.

"என்ன அதற்குள்?" என்று அவள் கையைப் பற்றினான்.

அவள் வெடுக்கென்று தன் கையை இழுத்துக் கொண்டாள். "பொழுது விடியப் போகிறது, தெரியும் இல்லையா? இப்போது மணி ஐந்தரை."

அவன் பெருமூச்சுடன் எழுந்தான்.கழற்றி வைத்திருந்த தன பாண்ட் பாக்கெட்டைத் துழாவியபடியே . "ரொம்ப நன்றி ஷீலா! உண்மையாகவே நேற்று இரவு எனக்கு முதல் இரவுதானோ என்று  தோன்றுகிறது. எப்படி உன்னால்  இவ்வளவு அருமையாக ..."

"ஒவ்வொரு கஸ்டமரும் ஒவ்வொரு வகை. நீங்கள் முதல் இரவு மனைவி போல் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியதால் அப்படி நடந்து கொண்டேன். உங்களைத் திருப்திப் படுத்துவதுதானே என் கடமை? வருகிறேன்" என்று கிளம்பினால், அவன் கொடுத்த நூரு ரூபாயைத் தன ரவிக்கைக்குள் திணித்தபடியே.

('ராணி' வார இதழ் 19/6/83இல், 'விஸ்வாமித்திரன்' என்ற புனைபெயரில் வெளியானது.)




No comments:

Post a Comment